Wednesday, October 28, 2009

புதிய புதிய... எல்லாம் புதியவை

மக்களே எல்லாம் நல்லா இருக்கீங்களா? கணிணிப் பக்கமே வந்து பல நாட்களாச்சு.. புது வேலை, புது இடம், புது மனிதர்கள், புதிய சவால்கள்.. ஆனா ஆள் மட்டும் அதே ஆள் தான்... நல்லபடியா புது வாழ்க்கைப் போய்க் கொண்டு இருக்கின்றது. வீட்டிலும் ஒரு புது மெம்பர்... வழக்கம் போல் இரவில் விழித்து பகலில் தூங்குகின்றாள்.




செல்லிடை பேசியில் ரீடரில் மட்டும் சில பதிவுகளைப் படித்து வருகின்றேன்.. தமிழ் பதிவுகள் படிக்க முடியாத நாட்கள் என்பவை மிகவும் கடினமான நாட்களாக உணர முடிகின்றது. அருகில் இருக்கும் ஆயில் அண்ணனை அவ்வப்போது சென்று சந்திக்க முடிகின்றது. ஊரில் மகனையும், மகளையும், மிஸ் செய்வதை உணர முடிகின்றது. மகள் பிறந்த போது அனைத்து கணங்களிலும் உடன் இருந்தது மறக்க முடியாத நினைவுகள்.






மகள் பிறந்த சில மணித் துளிகளில் மகனின் கையில்

இன்னும் சில தினங்களில் புது சவால்களின் அழுத்தம் குறைந்தது அனைத்தும் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம். சர்வேசனின் நச் கதைப் போட்டிக்கு ஒரு கதை ரெடியாக இருக்கின்றது.. மனதில்... :) எப்போது எழுத முடியும் என்று தெரியவில்லை... அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்களுக்கு, தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கும் நன்றிகள்.


அன்புடன்
தமிழ் பிரியன்

1 comments:

கோவி.கண்ணன் December 13, 2009 7:15 AM  

//மகள் பிறந்த சில மணித் துளிகளில் மகனின் கையில்//

வாழ்த்துகள்

About This Blog

About This Blog

  © Free Blogger Templates Spain by Ourblogtemplates.com 2008

Back to TOP